Tuesday, September 22, 2015

காதல் வெள்ளம்




பொங்கி வரும் 
காவிரியை 
தடுத்திடலாம் 
கல்லணை...

பூரித்து வரும் 
என் 
காதல் வெள்ளம் 
தாங்கிடுமா
 உன் 
கண் அணை...

-----------------------------------------------------------------------------------------------



தலை குளித்து
 நீ
 வரும் நேரம்...

எதிர் வரும்
என் நிலை
குறித்தும் 
கவனம் கொள்...

-------------------------------------------------------------------




உற்றுப் பார்த்தேன் 
உன் முதுகில் 
சில பூனைமுடி...

 ஊற்றெடுத்து
சுரக்குது
என் உள்ளத்தில்
 பல ஞானமடி...


2 comments:

KILLERGEE Devakottai said...


தங்களுக்கு காதல் ஜூரம் நன்றாகவே இருக்கிறது நண்பா... அருமை.

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

தங்களுக்கு காதல் ஜூரம் நன்றாகவே இருக்கிறது நண்பா... அருமை.//

ஆம் நண்பா. இளமைக்கு மருந்து இம்மையில் கிடைக்காமல் மறுமையில் கிடைத்து என்ன பயன்.... :))