Sunday, August 16, 2009

அதிசய 'மனித' மீன்

இன்றைய நாளிதழில் படித்த செய்தி.


தூத்துக்குடி : தூத்துக்குடி மீனவர் வலையில், மனிதர்களின் கை, கால்களைப் போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது. தூத்துக்குடி, மாதவ நாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அவர், நேற்று முன்தினம் மாலை திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் கண்,வாய்,மூக்கு,நெற்றி, தலை அமைப்புடன் இரு முன் துடுப்புகள் கைகளைப் போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப் போலவும் இருந்தன. இரண்டு கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன், ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்த மீன் எனக் கண்டறிய, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

கானா பிரபா said...

என்ன கொடும ராஜா இது ;)

Muruganandan M.K. said...

மிகவும் சுவையான தகவலைத் தந்துள்ளீர்கள். நன்றி

கலகலப்ரியா said...

//அந்த மீன், ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது.//
மீனே..நீ சமர்த்து..! இப்டி பொறந்தியோ.. தப்பிச்சியோ.. இல்லைனா சட்டில வெந்திருப்பா!

ஹேமா said...

மாறிக்கொன்டிருக்கும் உலகில் இன்னும் என்னென்ன நடக்குமோ.
பயமா இருக்கு.ஆனால் செய்தி அதிசயம்தான் ராஜா.

சப்ராஸ் அபூ பக்கர் said...

இவைகள் இறுதி நாளுக்கான அடையாளமாக இருக்கலாம் சிலவேளை....

Anonymous said...

இதை பத்தி பிறகு ஏதாவது கேள்வி பட்டீர்களா?